மாவட்ட சமூக நல அலுவலகத்தில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான வேலை வாய்ப்பு!

Tirunelveli SWD Recruitment 2024

திருநெல்வேலி மாவட்டம், சமூக நலத்துறையின் கீழ், இயங்கும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலியாக உள்ள வழக்கு பணியாளர், பல்நோக்கு பணியாளர் மற்றும் பாதுகாவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

அந்த அறிவிப்பின்படி, தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 30.09.2024 அன்று அதற்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு அறிவுத்தப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும், மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் https://tirunelveli.nic.in/ என்ற இணையதளத்தில் அறிவிப்பு மற்றும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

Latest Govt Jobs 2024
நிறுவனம் சமூக நலத்துறை, திருநெல்வேலி
வகை TN Govt Jobs
பணியின் பெயர் 1. வழக்கு பணியாளர்
2. பல்நோக்கு பணியாளர்
3. பாதுகாவலர்
காலியிடங்கள் 07
கடைசி தேதி 30.09.2024
விண்ணப்பிக்கும் முறை தபால்
Website https://tirunelveli.nic.in/


பணிக்கான காலியிட விபரங்கள்:-

வேலையின் பெயர் காலியிடம்
1. வழக்கு பணியாளர் 01
2.  பல்நோக்கு பணியாளர் 02
3.  பாதுகாவலர் 04


பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-

1. வழக்கு பணியாளர் (Case Worker):

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் சமூகப்பணி அல்லது உளவியல்  ஆலோசகர் இயலில் இளங்கலைப்பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சமூகப்பணியில் முதுகலைப்பட்டம் பெற்றவரும் விண்ணப்பிக்கலாம்.  உள்ளூரைச் சார்ந்தவராக இருத்தல் வேண்டும். 1 வருடத்திற்கு மேலாக குடும்ப நல ஆலோசனையில் முன் அனுபவம் பெற்ற பெண் பணியாளராக 24 மணி நேரம் சேவை அளிக்கும் வகையில் சுழற்சி முறையில் பணி அமர்த்தப்படுவார்கள். பெண் விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.

2. பல்நோக்கு பணியாளர்:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் குறந்தபட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். உள்ளூரைச் சார்ந்தவராக இருத்தல் வேண்டும். 1 வருடத்திற்கு மேலாக குடும்ப நல ஆலோசனையில் முன் அனுபவம் பெற்ற பெண் பணியாளராக 24 மணி நேரம் சேவை அளிக்கும் வகையில் சுழற்சி முறையில் பணி அமர்த்தப்படுவார்கள். பெண் விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.

3. பாதுகாவலர்:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் குறந்தபட்சம் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். உள்ளூரைச் சார்ந்தவராக இருத்தல் வேண்டும். 1 வருடத்திற்கு மேலாக குடும்ப நல ஆலோசனையில் முன் அனுபவம் பெற்ற பணியாளராக 24 மணி நேரம் சேவை அளிக்கும் வகையில் சுழற்சி முறையில் பணி அமர்த்தப்படுவார்கள்.

வயது வரம்பு விபரம்:

1. வழக்கு பணியாளர் (Case Worker):

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களின் வயது வரம்பானது குறைந்தபட்சம் 21 வயதிற்குள்ளும் அதிகபட்சமாக 35 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.

பணிக்கான ஊதிய விவரம்:-

வேலையின் பெயர் ஊதியம்
1. வழக்கு பணியாளர் (Case Worker) ₹. 18,000/-
2. பல்நோக்கு பணியாளர் ₹. 10,000/-
2. பாதுகாவர் ₹. 12,000/-

பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-

இந்தப் பணிக்கான இந்தப் பதவிக்கென எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-

இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் திருநெல்வேலி மாவட்டத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை பூர்த்தி செய்து அனைத்து சான்றிதழ் நகல்களில் சுய ஒப்பமிட்டு சம்மந்தப்பட்ட அலுகலகத்திற்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-

மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், திருநெல்வேலி.

அறிவிப்பாணை

விண்ணப்பப்படிவம்

கடைசி தேதி: 30.09.2024

Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Facebook Youtube
Twitter