தமிழ் நாடு அரசு செய்தி மக்கள் தொடர்புத்துறையில் வேலை வாய்ப்பு!

CBE NPRD Recruitment 2024

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் கோயப்புத்தூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் காலியாக உள்ள ஒரு பதிவுரு எழுத்தர் (Record Clerk) பணியிடத்தினை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அறிவிப்பின்படி, தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 04.10.2024 அன்று அதற்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு அறிவுத்தப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும், மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் https://hrce.tn.gov.in/ என்ற இணையதளத்தில் அறிவிப்பு மற்றும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
Latest Govt Jobs 2024
நிறுவனம் செய்தி மக்கள் தொடர்புத்துறை
வகை TN Govt Jobs
பணியின் பெயர் பதிவுரு எழுத்தர்
(இனசுழற்சி முறை - பழங்குடியினர்)
காலியிடங்கள் 01
கடைசி தேதி 04.10.2024
விண்ணப்ப முறை தபால்
பணிக்கான காலியிட விபரங்கள்:-
வேலையின் பெயர் காலியிடம்
1. பதிவுரு எழுத்தர் 01
பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-

1. பதிவுரு எழுத்தர்: இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு விபரம்:

வேலையின் பெயர் வயது வரம்பு
1. பதிவுரு எழுத்தர் 01.07.2024 அன்று 18 முதல் 35 வயதுக்குட்பட்டவராக இருத்தல் வேண்டும்.
பணிக்கான ஊதிய விவரம்:-
வேலையின் பெயர் ஊதியம்
1. பதிவுரு எழுத்தர் ₹.15,500 - 56,500/- Level - 2
பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-

இந்தப் பணிக்கான இந்தப் பதவிக்கென எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-

இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெயர், முகவரி, பிறந்த தேதி, கல்வித்தகுதி, அனுபவத்தகுதி மற்றும் பிற விவரங்களுடன் கூடிய முழுமையான விண்ணப்பப் படிவத்தினை கையொப்பமிட்டு, சமீபத்தில் எடுக்கப்பட்ட கடவுச்சீட்டு அளவிலான இரண்டு புகைப்படங்கள் மற்றும் சான்றிதழ் நகல்களுடன் தபால் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-

செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகம், கோயம்புத்தூர் மாவட்டம் - 641 018.

கடைசி தேதி: 04.10.2024
Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Facebook Youtube
Twitter