இந்து சமய அறநிலையத் துறையில் வேலை வாய்ப்பு:- இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் திருப்பூர் மாவட்டம், காங்கயம், வட்டம், சிவன்மலையில் உள்ள அருள்மிகு.சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தகுதியான இந்து மதத்தை சேர்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பாணை மற்றும் விண்ணப்பபடிவத்தை https://sivanmalaimurugan.hrce.tn.gov.in/ என்கிற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பணிக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 17.05.2023.
இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத் துறையில் வேலை வாய்ப்பு |
Page Contents
வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள் | |
---|---|
நிறுவனம் | இந்து சமய அறநிலையத் துறை, திருப்பூர் |
வகை | TN Govt Jobs |
பணியின் பெயர் | பல்வேறு |
காலியிடங்கள் | 13 |
கடைசி தேதி | 17.05.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
Website | https://sivanmalaimurugan.hrce.tn.gov.in/ |
பணிக்கான காலியிட விபரங்கள்:-
இந்தப் பதவிக்கான மொத்த காலியிடங்கள் 13 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பதவி | காலியிடங்கள் |
---|---|
வழக்கு எழுத்தர் | 01 |
சீட்டு விற்பனை எழுத்தர் | 02 |
தட்டச்சர் | 01 |
காவலர் | 04 |
தோட்டக்காரர் | 01 |
திருவலகு | 02 |
கூர்க்கா | 01 |
உதவி மின் பணியாளர் | 01 |
பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-
1. வழக்கு எழுத்தர்:-
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. சீட்டு விற்பனை எழுத்தர்:-
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3. தட்டச்சர்:-
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அரசு தொழில்நுட்ப தட்டச்சர் தேர்வில் தட்டச்சு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முதுநிலை அல்லது தமிழில் முதுநிலை மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை அல்லது ஆங்கிலத்தில் முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், விபரங்களுக்கு அறிவிப்பாணையை பார்க்கவும்.
4. காவலர்:-
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
5. தோட்டக்காரர்:-
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
6. திருவலகு:-
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
7. கூர்க்கா:-
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
8. உதவி மின் பணியாளர்:-
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தால் வழங்கப்பட்ட மின் / மின் கம்பிப்பணியாளர் தொழிற்பயிற்சி (I.T.I.) நிறுவனச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
பணிக்கான வயது வரம்பு விபரம்:-
பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்களின் வயதுவரம்பு குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சமாக 45 வயதிற்குள் இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பணிக்கான ஊதிய விவரம்:-
பதவி | ஊதியம் |
---|---|
வழக்கு எழுத்தர் | Rs.18,500/- 58,600/- (Pay Matrix-22) |
சீட்டு விற்பனை எழுத்தர் | Rs.18,500/- 58,600/- (Pay Matrix-22) |
தட்டச்சர் | Rs.18,500/- 58,600/- (Pay Matrix-22) |
காவலர் | Rs.15,900/- 50,400/- (Pay Matrix-17) |
தோட்டக்காரர் | Rs.11,600/- 36,800/- (Pay Matrix-12) |
திருவலகு | Rs.15,900/- 50,400/- (Pay Matrix-17) |
கூர்க்கா | Rs.15,900/- 50,400/- (Pay Matrix-17) |
உதவி மின் பணியாளர் | Rs.15,600/- 52,400/- (Pay Matrix-18) |
பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-
இந்தப் பதவிக்கென எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-
இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் அடிப்படை கல்வித்தகுதி, அனுபவம், செயல்முறை தேர்வுகள், கூடுதல் தகுதி மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் திருக்கோயிலின் அதிகாரபூர்வ இணையதளமான https://sivanmalaimurugan.hrce.tn.gov.in/ என்கிற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பாணை மற்றும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை விண்ணப்பப்படிவத்தில் பூர்த்தி செய்து அனைத்து கல்வி சான்று நகல்கள், பிறப்பு சான்றிதழ் நகல், இருப்பிட சான்றிதழ் நகல், நன்னடத்தை சான்றிதழ் நகல், மாற்றுத்திறனாளி சான்றிதழ் நகல், அனுபவம் சான்று நகல்கள், முன்னுரிமை சான்றிதழ் நகல் மற்றும் பிற சான்றிதழ் நகல்களில் சுய ஒப்பமிட்டு, இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை இணைத்து 17.05.2023 ஆம் தேதி தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தாமதமாக கிடைக்கப் பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-
உதவி ஆணையாளர்/செயல் அலுவலர்,
அருள்மிகு.சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்,
சிவன்மலை,
காங்கயம் வட்டம்,
திருப்பூர் - 638 701.
Notification Application Format |
Click Here |
கடைசி தேதி | 17.05.2023 |
Join our below-given groups for all the latest Jobs | |
---|---|
Telegram | |
Google News | |
Youtube | |
0 Comments