அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் வேலை வாய்ப்பு:- தமிழ்நாடு அரசு, இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயின் உள்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அதிகாரபூர்வ அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பாணை மற்றும் விண்ணப்பப்படிவத்தை http://www.tiruchendurmurugan.hrce.in.gov.in/ என்கிற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பணிகளுக்கு ஆன்லைன்/தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 27.01.2023.
அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் வேலை வாய்ப்பு |
Page Contents
HRCE Recruitment
Join our below-given groups for all the latest Jobs | |
---|---|
Telegram | |
Google News | |
Youtube | |
வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
நிறுவனம் | அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருச்செந்தூர், தூத்துக்குடி |
வகை | TN Govt Jobs |
பணியின் பெயர் | பல்வேறு |
காலியிடங்கள் | 06 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 27.01.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
Website | http://www.tiruchendurmurugan.hrce.in.gov.in |
பணிக்கான காலியிட விபரங்கள்:-
இந்தப் பதவிக்கான மொத்த காலியிடங்கள் 06 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- நாதஸ்வரம் - 1 காலியிடம்
- தவில் - 1 காலியிடம்
- தாளம் - 1 காலியிடம்
- சுருதி - 1 காலியிடம்
- உதவி அர்ச்சகர் - 1 காலியிடம்
- இலை விபூதிபோத்தி - 1 காலியிடம்
பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். சமய நிறுவனங்களால் அல்லது அரசு நிறுவனங்களால் அல்லது ஏனைய யாதொரு அரசால் அங்கீகரிக்கப்பட்ட யாதொரு நிறுவனங்களால் நடத்தப்படும் பள்ளியில் வேலை தொடர்புடைய துறையில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
பணிக்கான வயது வரம்பு விபரம்:-
வயது வரம்பு விபரங்கள் அறிவிப்பாணையில் குறிப்பிடப்படவில்லை.
பணிக்கான ஊதிய விவரம்:-
- நாதஸ்வரம் - Level-25(1) Rs.19,500 - Rs.62,000
- தவில் - Level-12(1) Rs.18,500 - Rs.58,600
- தாளம் - Level-12(1) Rs.18,500 - Rs.58,600
- சுருதி - Level-12(1) Rs.18,500 - Rs.58,600
- உதவி அர்ச்சகர் - Level-17(1) Rs.15,900 - Rs.50,400
- இலை விபூதிபோத்தி - Level-17(1) Rs.15,900 - Rs.50,400
பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-
இந்தப் பணிக்கான இந்தப் பதவிக்கென எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-
இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளமான http://www.tiruchendurmurugan.hrce.in.gov.in/ என்கிற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து அனைத்து கல்வி சான்று நகல்கள், அனுபவம் சான்று நகல்கள், மற்றும் பிற சான்றிதழ் நகல்களுடன் புகைப்படத்தை இணைத்து 27.01.2023 ஆம் தேதி மாலை 05.45 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தாமதமாக கிடைக்கப் பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பணிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-
இணை ஆணையர்/செயல் அலுவலர்,
அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்,
திருச்செந்தூர் - 628 215.
Download Notification PDF
கடைசி தேதி: 27.01.2023
Join our below-given groups for all the latest Jobs | |
---|---|
Telegram | |
Google News | |
Youtube | |
0 Comments