மாவட்ட சமூக நலத்துறையில் 8 மற்றும் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான வேலை வாய்ப்பு!

Madurai Social Welfare Department Recruitment 2024

மதுரை மாவட்டம், மாவட்ட சமூக நல அலுவகத்தின் கீழ் இயங்கும் One Stop Centre-ல் காலியாக உள்ள வழக்கு பணியாளர், பாதுகாவலர் மற்றும் பல்நோக்கு உதவியாளர் ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு  வெளியாகியுள்ளது.

அறிவிப்பின்படி, தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 31.07.2024 அன்று அதற்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு அறிவுத்தப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும், மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் https://madurai.nic.in/ என்ற இணையதளத்தில் அறிவிப்பு மற்றும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

Latest Govt Jobs 2024
நிறுவனம் சமூக நலத்துறை
வகை TN Govt Jobs
பணியின் பெயர் பல்வேறு
காலியிடங்கள் 06
கடைசி தேதி 31.07.2024
விண்ணப்பிக்கும் முறை தபால்
Website https://madurai.nic.in/

பணிக்கான காலியிட விபரங்கள்:-

வேலையின் பெயர் காலியிடம்
1. வழக்கு பணியாளர் 02
2. பாதுகாவர் 02
3. பல்நோக்கு உதவியாளர் 02

பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-

1. வழக்கு பணியாளர்:

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் சமூகப்பணி அல்லது உளவியல் இளங்கலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சமூகப்பணியில் முதுகலைப் பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட பெண்களுக்கு உதவி புரிதலில் குறந்தபட்சம் 1 வருடம் முன் அனுபவம் வாய்ந்தவராக இருத்தல் வேண்டும்.

அரசு மற்றும் அரசு சார திட்டங்களோடு ஒன்றிணைந்து செயல்படுவதோடு குறந்தபட்சம் 1 வருடம் முன் அனுபவம் ஆற்றுப்படுத்துதலில் (Counselling) இருக்க வேண்டும். 24 மணி நேரம் சுழற்சி முறையில் பணியாற்ற தயார் நிலையில் இருத்தல் வேண்டும். மதுரையை சேர்ந்த பெண் விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.

2. பாதுகாவலர்:

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் குறந்தபட்சம் 10 ஆம் வகுப்பு  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அலுவலக அமைப்பில் குறந்தபட்சம் 1 வருடம் பணிபுர்ந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 24 மணி நேர சேவையை வழங்க (பகல் மற்றும் இரவு) ஷிப்ட் முறையில் பணி மேற்கொள்ள வேண்டும். மதுரையை சேர்ந்த பெண் விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.

3. பல்நோக்கு உதவியாளர்:

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் குறந்தபட்சம் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அலுவலக அமைப்பில் குறந்தபட்சம் 1 வருடம் பணிபுர்ந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 24 மணி நேர சேவையை வழங்க (பகல் மற்றும் இரவு) ஷிப்ட் முறையில் பணி மேற்கொள்ள வேண்டும்.  சமைக்க தெரிந்திருக்க வேண்டும். மதுரையை சேர்ந்த பெண் விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு விபரம்:

வழக்கு பணியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களின் வயது வரம்பு 35 வயதிற்குள் இருத்தல் வேண்டும்.

பணிக்கான ஊதிய விவரம்:-

வேலையின் பெயர் ஊதியம்
1. வழக்கு பணியாளர் ₹. 18,000/-
2. பாதுகாவர் ₹. 12,000/-
3. பல்நோக்கு உதவியாளர் ₹. 10,000/-

பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-

இந்தப் பணிக்கான இந்தப் பதவிக்கென எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-

இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் மதுரை மாவட்டத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை பூர்த்தி செய்து அனைத்து சான்றிதழ் நகல்களில் சுய ஒப்பமிட்டு சம்மந்தப்பட்ட அலுகலகத்திற்கு நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-

மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், மூன்றாவது தளம், கூடுதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை - 622020.

அறிவிப்பாணை

விண்ணப்பப்படிவம்


கடைசி தேதி: 31.07.2024

Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Facebook Youtube
Twitter