மாவட்ட இளைஞர் நீதிக்குழுமத்தில் வேலை வாய்ப்பு. உடனே விண்ணப்பியுங்கள்!

Chennai DSWD Recruitment 2024

சென்னை மாவட்ட இளைஞர் நீதிகுழுமத்தில் பணிபுரிய உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர் பதவியினை நிரப்பும் பொருட்டு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பாணை மற்றும் விண்ணப்பப்படிவத்தை https://chennai.nic.in/ என்கிற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பணிக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 11.07.2024.

இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

Latest Govt Jobs 2024
நிறுவனம் மாவட்ட சமூக நலத்துறை
வகை TN Govt Jobs
பணியின் பெயர் உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர்
காலியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 11.07.2024
விண்ணப்பிக்கும் முறை தபால்
Website https://chennai.nic.in/

பணிக்கான காலியிட விபரங்கள்:-

இந்தப் பதவிக்கான மொத்த காலியிடங்கள் 01 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  1. உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர் - 01 காலியிடம்.

பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-

1. உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர்:

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தட்டச்சு தமிழ் மற்றும் ஆங்கிலம் முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினி அறிவு பெற்றிருக்க வேண்டும் (சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்).

பணிக்கான வயது வரம்பு விபரம்:-

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 40 வயதுக்கு மேற்பட்டவராக இருத்தல் கூடாது (பொது விண்ணப்பதாரர்களுக்கு).

பணிக்கான ஊதிய விவரம்:-

இந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரருக்கு மாதம் ₹. 11,916/- வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-

இந்தப் பணிக்கான இந்தப் பதவிக்கென எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-

இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் சென்னை மாவட்டத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை பூர்த்தி செய்து அனைத்து சான்றிதழ் நகல்களில் சுய ஒப்பமிட்டு சம்மந்தப்பட்ட அலுகலகத்திற்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, எண். 13, சாமி பிள்ளைத் தெரு, சூளை நெடுஞ்சாலை, சூளை, சென்னை - 600 012.

அறிவிப்பாணை

விண்ணப்பபடிவம்

கடைசி தேதி: 11.07.2024

Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Instagram Google News
Facebook Youtube
Twitter